மம்தா பானர்ஜியின் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பாபுல் சுப்ரியோ

ஜெய் ஸ்ரீ ராம் என கூறியதற்காக 10 பேரை மேற்கு வங்க போலீசார் கைது செய்திருப்பது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மன நிலை பாதிக்கப்பட்டிருப்பதையே காட்டுவதாக மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே நீடிப்பார் என்றும், மதங்களையோ, அரசியல் சாசனம் அளித்துள்ள பதவிகளையோ, மக்களையோ மதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மம்தா பானர்ஜி உள்ளதாகவும் கூறினார்.

முதலமைச்சர் பதவிக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள மம்தா பானர்ஜி மறுப்பதாகக் குறிப்பிட்ட பாபுல் சுப்ரியோ, அரசியல் சாசனம் அளித்துள்ள பதவிகளையோ, மக்களையோ மதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மம்தா பானர்ஜி இருப்பதாகவும் கூறினார்.

Leave a Reply