மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்த பெண் உச்சநீதிமன்றத்தில் மனு

நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் ஒன்றில் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை ஒட்டி மார்பிங் செய்து வெளியிட்டதாக பாஜக இளைஞரணியை சேர்ந்த பிர்யங்கா ஷர்மா என்ற பெண் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் பிரியங்கா ஷர்மா மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளார்.

பிரியங்கா ஷர்மா அளித்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விசாரணை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply