shadow

மனைவியாகவே இருந்தாலும் 18 வயது குறைவான பெண்ணுடன் உறவு கொண்டால் வன்கொடுமையே: சுப்ரீம் கோர்ட்

18 வயதுக்கு குறைவான சிறுமியை திருமணம் செய்து அவருடைய சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அதுவும் வன்கொடுமையை சார்ந்ததே என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவால் குழந்தை திருமணம் கட்டுப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி திருமணம் ஆன ஒரு பெண், ஒரு வருடத்திற்குள் கணவர் உள்பட யார் மீது புகார் அளித்தாலும் அதுவும் வன்கொடுமை கணக்கில் சேர்ந்துவிடும் என்று அறிவித்துள்ளது.

பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து இதுபோன்ற அறிவிப்புகள் அவசியம் என்று பெண்கள் அமைப்புகள் கூறி இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

Leave a Reply