shadow

மந்தனா அபார ஆட்டம்: தொடரை வென்றது இந்திய மகளிர் அணி

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் வென்றுள்ளது

இந்த நிலையில் இன்று மும்பையில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியது

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 43.3 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலைய்ல் இந்திய அணி 41.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் மந்தனா-63, மிதாலிராஜ்-47 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்

ஜூலான் கோஸ்வாமி ஆட்டநாயகி விருதினை வென்றார்

 

Leave a Reply