மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத்: காங்கிரஸ் அறிவிப்பு
நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி தற்போது முதல்கட்டமாக மபி மாநில முதல்வரை அறிவித்துள்ளது..
தற்போது மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்பார் என காங்கிரஸ் மேலிடம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது இதனையடுத்து அவர் நாளை தனது அமைச்சரவையுடன் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய இரு மாநில முதல்வர்களும் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மட்டுமின்றி இம்மாநிலத்தில் இருந்து 9 முறை மக்களவைக்கு தேர்வான கமல்நாத் தலைமையில் மபியில் நல்ல ஆட்சி நடக்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.