shadow

மத்திய அரசின் மீது சந்தேகம் வருகிறது: அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேர்களை விடுவிப்பது தொடர்பாக மாநில அரசே முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் இதுகுறித்து அமைச்சரவை தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பியது.

அமைச்சரவையின் தீர்மானம் இயற்றப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் கவர்னர் இன்னும் முடிவெடுக்காததால் 7 பேர்கள் விடுதலை இன்னும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் இதுகுறித்து கூறியபோது, ‘7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், அப்போதுதான் தீர்வு கிடைக்கும் என்றும், 7 பேர் விடுதலையில் காலம் கடத்தப்பட்டு வருவது, மத்திய அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

 

Leave a Reply