shadow

மத்திய அரசிடம் இருந்து இன்னும் ஒரு பைசா கூட கஜா நிதி வரவில்லை: உதயகுமார்

கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை அருகே திருமங்கலத்தில் இலவச மிதிவண்டி வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயகுமார் அதன்பி செயுதியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசில் இருந்து ஒரு ரூபாய் கூட இன்னும் கஜா புயல் நிவாரண நிதியாக வரவில்லை. இருப்பினும் தமிழக அரசு ரூ.1,400 கோடிக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளது என்று கூறினார்

மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மை என்பதையே அமைச்சரின் இந்த பேச்சு தெரிவிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.

 

Leave a Reply