shadow

மத்திய அமைச்சரை தாக்கிய மர்ம நபர்: போலீசார் விசாரணை

ramdas-athawale1மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே என்ற பகுதியில் உள்ள ஆம்பர்நாத் என்ற இடத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் வந்திருந்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் மேடையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு மர்ம நபர் மத்திய அமைச்சரை தாக்கியதால் பரபரப்பான நிலை உருவானது.

உடனே அந்த நபரை அருகில் இருந்தவர்கள் கடுமையாக தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த அந்த நபரை போலீசார் கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மத்திய அமைச்சரை தாக்கிய நபரின் பெயர் பிரவிண் கோசவை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தானே போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply