மதுரை மாவட்ட ஆட்சியர் திடீர் இடமாற்றம்
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜனை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த மக்களவை தேர்தலின்போது மதுரை மாவட்ட ஆட்சியராகவும், தேர்தல் அதிகாரியுமாக இருந்த நடராஜனை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. அதன்பின்னர் புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜனை தமிழக அரசு நியமனம் செய்தது. இந்த நிலையில் தற்போது நாகராஜன் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பை வருவாய் அதிகாரி சாந்தகுமார் கூடுதலாக கவனிப்பார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.