shadow

மதுரை ஆதினம் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்

அவரது மறைவிற்கு ஆன்மீக வாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன. சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் நேற்றிரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மதுரை ஆதினம் மறைவையடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.