மதுரையை அடுத்து திருச்சி ரயில்வே கோட்டத்திலும் வட இந்தியர்கள்: அதிர்ச்சியில் தமிழர்கள்


மதுரை கோட்ட ரயில்வே பணியில் 522 காலி பணியிடங்களில் வெறும் 10 தமிழர்கள் மட்டுமே தேர்வான அதிர்ச்சி செய்தி நேற்று வெளிவந்த நிலையில் தற்போது அதே கொடுமை திருச்சி ரயில்வே கோட்டத்திலும் நடந்துள்ளது தமிழர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

திருச்சி ரயில்வே கோட்டத்தில் 528 காலிப்பணியிடங்கள் இருந்த நிலையில் இந்தத் தேர்வில் 53 தமிழர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளதாக தெரிகிறது. அதாவது 10 சதவீதம் மட்டுமே தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் வெளிமாநிலத்தவர் 90% பேர் தேர்வு பெற்று விட்டதாகவும் வெளிவந்துள்ள தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன

மதுரை , திருச்சி அடுத்து தமிழகம் முழுவதுமே ரயில்வே துறையில் வட இந்தியர்கள் ஆக்கிரமித்துக் கொள்ளும் அபாயம் இருப்பதால் தற்போது தமிழர்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply