மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வைகோவை பரிசோதித்த மருத்துவர்கள், வைகோவை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ஆகஸ்ட் 20,21,22 ஆகிய நாட்களில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக தேனியில் நடைபெறவிருந்த வைகோவின் பிரச்சாரம் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் மோடி, அமித்ஷா, அத்வானி ஆகியோர்களை சந்தித்த வைகோ, அதன்பின் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை அடக்கி வாசிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply