மணிரத்னம்-சுஹாசினியுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட குஷ்பு
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படம் இந்த ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்று. இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாறு திரைப்படங்கள் இயக்கும் ஒரே பழம்பெரும் இயக்குனரான மணிரத்னம் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, மணிரத்னம்-சுஹாசினி தம்பதியை சந்தித்து ‘செக்க சிவந்த வானம்’ பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவர்களுடன் இணைந்து ஒரு செல்பியும் எடுத்துள்ளார்.
இந்த செல்பி புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே குஷ்புவும், சுஹாசினியும் சிறந்த தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்பு, சுஹாசினி, மணிரத்னம், செக்க சிவந்த வானம்
Leave a Reply
You must be logged in to post a comment.