மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி: பாமக ராமதாஸ் விளக்கம்
வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர முயற்சியில் உள்ளது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறப்போவதாகவும், ஐந்து மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து பாமக ராம்தாஸ் கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் கூட்டணி குறித்து ஊடகங்கள் கற்பனை குதிரையில் சவாரி செய்து உண்மையற்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். கூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. முடிவு எடுத்தவுடன் அதை வெளிப்படையாக அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் கூட்டணிகுறித்து ஊடகங்கள் கற்பனை குதிரையில் சவாரி செய்து உண்மையற்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். கூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. முடிவு எடுத்தவுடன் அதை வெளிப்படையாக அறிவிப்பேன்!
— Dr S RAMADOSS (@drramadoss) January 22, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.