மகாராஷ்டிரா வெள்ளம்: இருசக்கர மெக்கானிக்குகளின் கருணை உள்ளம்
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் கனமழை பெய்து பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியபோது சென்னையில் பல இருசக்கர , நான்கு சக்கர வாகனங்கள் பழுதாகியது என்பதும், இந்த வாகனங்களை அந்தந்த பகுதியில் உள்ள மெக்கானிக்குகள் சாலையிலேயே பழுது பார்த்தனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் பழுதாகியுள்ளன. இந்த நிலையில் படத்தில் இருக்கும் இந்த இரண்டு மெக்கானிக்குகள் ஒவ்வொரு வீதிக்கும் சென்று அங்கு பழுதாகியிருந்த இருசக்கர வாகனங்களை எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக பழுதுநீக்கி தருகின்றனர். இவர்களது சேவையை சமூக வலைத்தளங்கள் பாராட்டி வருகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.