ஒரே நாளில்113 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு பத்தாயிரத்துக்கும் மேல் இருந்து வரும் நிலையில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 113 பேர் உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
அதுமட்டுமன்றி நேற்று மட்டும் அம்மாநிலத்தில் 3,487 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 568 பலி எண்ணிக்கை 3830 ஆகவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மகாராஷ்டிரா சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது பெரும் சோகமாக தகவலாகும்
Leave a Reply
You must be logged in to post a comment.