கொரோனா தந்த அதிர்ச்சி

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா மிக அதிகமாக பாதித்து வருகிறது என்பதும் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை சமீபத்தில் தாண்டியது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று மட்டும் புதிதாக 5491 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது

இதனை அடுத்து அம்மாநிலத்தில் குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் மொத்த எண்ணிக்கை 1.6 லட்சமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று மட்டும் 156 பேர் பலியாகியுள்ளதாகவும் இதனை அடுத்து பலியானோர் எண்ணிக்கை மொத்தம் 7429 என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இந்தியாவில் மிக அதிக பாதிப்பு இருக்கும் மாநிலத்தில் கொரோனாவின் தாக்கத்தை குறைக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply