மகாபலிபுரம் மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகையின் காரணமாக மகாபலிபுரம் உலக அளவில் இன்று ஒரு பேசப்படும் நகரமாக மாறிவிட்டது

பொதுவாக உலக தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தரும் போது டெல்லி, மும்பை அல்லது ஆக்ராவில் தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்

ஆனால் சீன அதிபர் மகாபலிபுரத்தை தேர்வு செய்ததை அடுத்து உலகமே மகாபலிபுரத்தை உற்று நோக்க ஆரம்பித்து உள்ளது

இதனால் மகாபலிபுரத்தில் இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிய வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மகாபலிபுரம் உலகின் முக்கிய சுற்றுலாதலமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

உலகின் மொத்த மீடியாக்களும் தற்போது மகாபலிபுரத்தில் குவிந்துள்ளதால் சீன அதிபரின் வருகை குறித்த செய்தி மட்டுமன்றி மகாபலிபுரம் குறித்த பெருமைகளையும் செய்திகளாக தங்கள் நாட்டிற்கு அனுப்பி வருகின்றனர்

எனவே மகாபலிபுரம் உலக அளவில் ஒரு சுற்றுலாத் தலமாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

இதனால் மகாபலிபுரம் மக்களுக்கு மிகப்பெரிய வியாபாரம் நடைபெறும் என்றும் அந்நகர மக்களுக்கு அடித்த ஒரு ஜாக்பாட் ஆகும் இது என்றும் கருதப்படுகிறது

Leave a Reply