shadow

மகளை பாலியல் உறவுக்கு அழைத்த தாய்! தந்தை போலீஸ் புகார்

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் இன்று மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

‘நான் பழம்பெரும் சினிமா பட இயக்குனரின் குடும்பத்தை சேர்ந்தவன். என் உறவினர் ஒருவர் காவல்துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். என் குடும்பத்தில் திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்துவிட்டது. சென்னையில் 9ம் வகுப்பு படிக்கும் எனது 14 வயது மகளிடம், எனது மனைவியே தகாத உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு மறுத்த அவளை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதற்கும் துணிந்துவிட்டார். என் மாமியாரும் உடந்தையாக இருந்துள்ளார். நான் எச்சரிக்கை விடுத்தும் மனைவியும், மாமியாரும் திருந்துவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து என் மகளுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனால் அவர்கள் இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து மகளிர் போலீசார் `போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். இருவரும் கும்பகோணத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக கும்பகோணத்திற்கு சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply