ப.சிதம்பரத்தை போன்று எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைது: எச்.ராஜா
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தபின்னர் காங்கிரஸ் தலைவர்களுக்கு குறி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ப.சிதம்பரம், டிகே சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் தமிழக அரசு நீர் மேலாண்மை திட்டத்தில் தனது கவனத்தை செலுத்த வேண்டும் என்றும், அதிக தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்றும் கூறிய ஹெச்.ராஜா, முதலமைச்சரின் இஸ்ரேல் பயணம் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.