ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ப.சிதம்பரம் திகார் ஜெயிலில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஏற்கனவே சிபிஐ கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் ப.சிதம்பரம் கேட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை இல்லை என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சரியான திசையில் செல்வதாகவும், விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply