போலீஸ் சங்கம் அமைக்க போராடியவர் திடீர் மரணம்

போலீசாருக்காக சங்கம் அமைக்க அனுமதி வேண்டும் என்று போலீஸ்காரர்கள் பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு இதுவரை போலீசார் சங்கம் அமைக்க அனுமதி அளிக்கவில்லை

இந்த நிலையில் போலீசாருக்காக சங்கம் கேட்டு போராடி வந்த சிவக்குமார் என்பவர் இன்று திடீரென மாரடைப்பால் சென்னையில் காலமானார்

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் – ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சிவக்குமர் என்பதும், மேலும் இவர் தமிழ்நாடு காவல்துறை காவலர்கள் சங்க மாநில தலைவராக இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply