போலி பாஸ்போர்ட் விவகாரம்: மூளையாக செயல்பட்டது ஒரு இளம்பெண்ணா?

தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக 13 பேரை கைது செய்து கியூ பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கைதான இந்த கும்பலிடம் இருந்து 100 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் போலி பாஸ்போர்ட் மோசடியில் திருச்சியை சேர்ந்த இளம்பெண் கலைச்செல்வி என்பவர் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் இலங்கையை சேர்ந்த கிருபராசா, விமலன், உதயா உட்பட 13பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், இலங்கையை சேர்ந்தவர்கள் வெளிநாடு தப்பிச்செல்ல போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது

Leave a Reply