shadow

போராட்டம் செய்த 14 ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் திடீர் சஸ்பெண்ட்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்கள் சங்கத்தினர் கடந்த ஐந்து நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் 14பேரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூவண்ணன், செல்லதுரை, தாமரைச்செல்வன், யோகராஜா, சாலைசெந்தில்குமார், முத்துச்சாமி, சோமசுந்தரம், கோலாச்சி, உட்பட 14பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் போராட்டம் தொடர்ந்தால் இன்னும் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply