shadow

போயஸ் கார்டனில் ஐடி ரெய்டு: அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நேற்றிரவு திடீரென 10 வருமான வரித்துறையினர் உள்ளே நுழைந்து சோதனை செய்தனர். ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்த பூங்குன்றனின் அறையில் மட்டுமே சோதனை செய்யப்பட்டதாக தினகரன் தரப்பினர்களும், வருமான வரித்துறையினர்களும் கூறியுள்ளனர்.

இருப்பினும் ஜெயலலிதாவின் வீட்டில் ரெய்டு நடப்பதை அதிமுக தொண்டர்களால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை. மோடி ஒழிக, மத்திய அரசு ஒழிக என போயஸ் கார்டன் வீட்டின் முன் கோஷம் போட்டனர். ஆனால் இந்த களேபேரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் வாயை திறக்காமல் மெளனமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரெய்டு குறித்து ஜெயா டிவி சி.இ.ஓ விவேக் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘`ஒரு லேப்டாப் மற்றும் இரண்டு பென்ட்ரைவை சோதனையிட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். ஜெயலலிதாவின் அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர் அதிகாரிகள்’ என்று கூறினார்

 

Leave a Reply