shadow

போக்குவரத்து வாகன வரி செலுத்த கடைசி தேதி மே 15 என்று இருந்த நிலையில் தற்போது ஜூன் 30 என நீட்டித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த மே 9 ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது

அந்த கூட்டத்தின் போது தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் கோரிக்கை மற்றும் நலன்களை கருத்தில் கொண்டு தமிழக அரசால் போக்குவரத்து வாகனங்களுக்கு ஜூன் 30ஆம் தேதிக்கான காலாண்டு முடிவிற்கான வரியினை அபராதம் இல்லாமல் செலுத்துவதற்கு கடைசி தேதியான மே 15 என்று இருந்ததை ஜூன் 30 ஆக நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்த உத்தரவினால் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது