பொள்ளாச்சி விவகாரம்: போராட்டம் செய்த மாணவிகளை தரதரவென இழுத்த போலீஸ்

பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில் குற்றவாளிகள் நால்வர் கைது செய்யப்பட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றிய பின்னரும் ஒருசில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இந்த பிரச்சனையில் போராட்டம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் இன்று போராட்டம் நடத்தினர். ஆனால் மாணவர்களை அடித்து எழுத்து வேனில் ஏற்ற போலீஸ் முயற்சி செய்ததாகவும், பெண்கள் என கூட பார்க்காமல் மாணவிகளை போலீஸ் தரத்தரவென எழுத்துச் சென்றதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

போலீசார்களின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தள பயனாளிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply