பொள்ளாச்சி விவகாரம்: புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியிட்ட அதிகாரிக்கு சிக்கல்
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது
பாலியல் புகார் கொடுத்த பெண்ணின் பெயர் உள்பட மற்ற அனைத்து விபரங்களும் ரகசியம் காக்க வேண்டும் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பொள்ளாச்சி விவகாரத்தில் மட்டும் பெண்ணின் பெயர் வெளியே சொல்லப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது
பெண்ணின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.