shadow

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 88 வயதான நுங்கு விற்கும் இசைக் கலைஞர் குருசாமிக்கு ஓய்வூதிய உத்தரவு நாளை நிச்சயம் வழங்கப்படும் என தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் நலிவடைந்த இசை கலைஞர் குருசாமி குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியான நிலையில் அவருக்கும் ஓய்வூதிய உத்தரவு வழங்கப்பட உள்ளது. என்றும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் மண்டல கலை பண்பாட்டு மையத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் தங்கள் வருமான வரி சான்றிதழ் வழங்கினால் நேரடியாக அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என -தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.