பரபரப்பு தகவல்

பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் மாதம் தொடங்க உயர்கல்வித் துறையின் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வை நடத்துவது குறித்து உயர்கல்வித் துறையின் கவுன்சில் கூட்டம் கடந்த 29-ம் தேதி அண்ணாபல்கலைக்கழகத்தில் நடந்தது.

இதில், ‘பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்பத் தேதியை ஜூலை 2-வது வாரத்தில் அறிவிக்க வேண்டும் என்றும், செப்.16-ல் வகுப்புகள் தொடக்கம் என்றும் முடிவெடுக்கப்பட்டது

அதேபோல் ஆகஸ்ட் 30-க்குள் முதல் சுற்றுகலந்தாய்வையும், செப். 10-க்குள் 2-ம் சுற்று கலந்தாய்வையும் முடிக்கவும், செப்.16-ம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படவேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply