shadow

பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பிற்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜி ஆக இருந்த பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்ற நிலையிலும் அவரை அதே பிரிவின் சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் சென்னை ஐகோர்ட் நியமனம் செய்தது.

ஆனால் இந்த நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை வந்த நிலையில் பொன் மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்து மீண்டும் பொன் மாணிக்கவேல் தனது பணியை தொடரவுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply