பொதுமேடையில் திடீரென மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மேடையிலேயே திடீரென மயங்கி சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மஹாராஷ்டிர மாநிலம் அகமதுநகரில், வேளாண் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று பங்கேற்றார்.
பட்டமளிப்பு விழாவில் சுமார் அரை மணி நேரம் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேசிய கீதத்துக்காக எழுந்து நின்ற போது தலைச்சுற்றல் ஏற்பட்டது. இருக்கையில் அமர்ந்த அவருக்கு சாக்லெட் ஒன்றை மஹாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் வழங்கினார்.
அதனை சாப்பிட்ட பின் எழுந்து நின்ற. நிதின் கட்கரி கண்கள் செருகிய நிலையில் மயங்கி சரிந்தார். அவரை ஆளுநரும், உடன் பாதுகாப்புக்கு இருந்தவர்களும் இருக்கையில் அமர வைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.