பொதுத்துறை வங்கிகளில் 12 ஆயிரம் எழுத்தர் வேலை காலி! விண்ணப்பித்துவிட்டீர்களா?

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணபிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து வங்கி பணியாளர் தேர்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை தற்போது பார்ப்போம்

அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 17 பொதுத் துறை வங்கிகளுக்கு நாடு முழுவதும் உள்ள கிளைகளில் 12 ஆயிரத்து 75 எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளது

இதில் ஆந்திரா வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, இந்தியன் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா போன்ற பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளது

தமிழ்நாடு, கர்நாடகம், மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள பொதுத்துறை வங்கி கிளைகளில் அதிகமான எண்ணிக்கையில் எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நாளை முதல் அதாவது செப். 17 முதல் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு வரும் டிசம்பர் மாதம் 7, 8, 14 மற்றும் 21 ஆம் தேதிகளில் நடைபெறும். மெயின் தேர்வு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி நடைபெறும். இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், 13 மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுகு //ibps.in/ என்ற இணையதளத்தை அணுகவும்

Leave a Reply