shadow

பொங்கல் சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்

பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் 24 ஆயிரத்து 708 சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்குவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் இந்த சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், மாதவரம், பூவிருந்தமல்லி, கே.கே நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply