shadow

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் நளினி முருகன் உள்பட 7 பேர் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் பேரறிவாளன் மட்டும் அவ்வப்போது பரோலில் வருகிறார்

சமீபத்தில் பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோலில் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது இது குறித்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது