பேனர் குற்றவாளி இருக்கின்றாரா? வெளிநாட்டிற்கு தப்பிவிட்டாரா? சென்னை ஐகோர்ட் காரசார கேள்வி

பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ மரணம் அடைந்த விவகாரத்தில் லாரி டிரைவரை சுறுசுறுப்பாக கைது செய்த போலீசார், போஸ்டர் அடித்த பிரிண்டிங் பிரஸ்ஸை சீல் வைத்த போலீசார் இன்னும் பேனர் வைத்தவரை கைது செய்யவில்லை.

இந்த நிலையில் சுபஸ்ரீ மரணம் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பேனர் வைத்த ஜெயகோபால் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் இன்று வரை போலீஸ் கைது செய்யவில்லை என்றூம் விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் திமுக வாதம் செய்தது

இந்த நிலையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயகோபால் எங்கே? என்று கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட் அவர் உள்ளூரில் தான் இருக்கின்றாரா? அல்லது அவரும் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டாரா? என்று காரசாரமான கேள்வியை கேட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது

Leave a Reply