‘பேட்ட’ படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த 150 பேர்! யார் தெரியுமா?
கடந்த 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட’ திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில் இந்த படம் ரூ.100 கோடி வசூலையும் தாண்டி இரண்டாவது வாரமாக வெற்றி நடைபோட்டு வருகிறது.
இந்த நிலையில் நாகையில் ரஜினி மக்கள் மன்றத்தினர், ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வரும் சிறுவர்களை பேட்ட திரைப்படத்திற்கு அழைத்து சென்றனர்.
150க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும் படத்தின் இடைவெளையின் போது சிற்றுண்டி வழங்கப்பட்டது. திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பது இதுவே முதல் முறை என்று சிறுவர்கள் அப்போது தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.