shadow

பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் இல்லை: வேலைநிறுத்தம் செய்வார்களா ஜாக்டோ ஜியோ?

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்த நிலையில் இன்று அரசுடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என அறிவித்துள்ளனர். மேலும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நாளை கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே டிசம்பர் 4ம் தேதி அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்திருக்கும் நிலையில் தமிழக அரசுடன் ஜாக்டோ-ஜியோ நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply