பெர்த் டெஸ்ட்: இந்தியா வெற்றி பெற 287 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியாவில் ஊள்ள பெர்த் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 287 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இருப்பினும் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் அதிகம் எடுத்திருந்ததால் இந்தியா வெற்றி பெற 287 ரன்கள் தேவை.
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். குறிப்பாக முகமது ஷமி 6 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
Leave a Reply
You must be logged in to post a comment.