பெரியார் தொண்டு நிறுவனம் மக்களுக்கு சொந்தமானது: எச்.ராஜா
பெரியார் தொண்டு நிறுவனம் மக்களுக்கு சொந்தமானது என்றும், அதனை பொதுவுடமை ஆக்க வேண்டும் என்றும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளதை அடுத்து பெரியார் தொண்டு நிறுவனத்தை நிர்வகித்து வரும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, பெரியார் தொண்டு நிறுவனம் மக்களுக்கு சொந்தமானது என்றார் இந்த தொண்டு நிறுவனத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கும் நிலையில் எச்.ராஜா இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.