பெரியார் சிலை உடைப்பு: திகவினர் சாலை மறியலால் பரபரப்பு

அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை மர்ம நபர்கள் இன்று காலை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பட்டுக்கோட்டை – அறந்தாங்கி சாலையில் திகவினர் மறியலில் ஈடுபட்டு உள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Leave a Reply