பெரியபாண்டியன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை
ராஜஸ்தான் கொள்ளையர்களால் நேற்று சுட்டு கொல்லப்பட்ட ரியல் தீரன் பெரியபாண்டியனின் உடல் இன்று காலை ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு சற்றுமுன்னர் கொண்டு வரப்பட்டது
சென்னை விமான நிலையத்தில் உள்ள பெரிய பாண்டியனின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பட்டி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கையில் கருப்புப்பட்டை அணிந்த வண்ணம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அஞ்சலி முடிந்ததும் மீண்டும் மதுரைக்கு பெரியபாண்டியனின் உடல் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அவருடைய சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.