பெண் மீது லாரி மோதல்: கோபத்தில் குடிசையை கொளுத்திய பொதுமக்கள்
திருவள்ளூரை அடுத்த சிவன்வாயல் பகுதியில் உள்ள ஏரியில் அரசு சவுடுமண் குவாரி செயல்பட்டு வருகிறது. இன்று காலை அங்கு மண் ஏற்றிவந்த லாரி ஒன்று அதே பகுதியைச் சேர்ந்த பத்மா என்ற பெண்மீது மோதியது.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் அங்கிருந்த அலுவலக குடிசையை கொளுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர்
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களின் கலவரத்தை கட்டுப்படுத்தினர். தற்போது அந்த பகுதியில் அமைதி திரும்பி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.