பெண் பத்திரிக்கையாளர்கள் மீது அவதூறு: கிஷோர் கே சாமி கைது
பாஜக ஆதரவாளரும் சமூக வலைத்தளங்களில் புகழ் பெற்றவருமான கிஷோர் கே சாமி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இவர் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக பெண் ஒருவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் கிஷோ கே.சாமியை கைது செய்தனர்.
மேலும் தமிழ்நாடு பெண் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பிலும் பெண் பத்திரிகையாளர் குறித்து கிஷோர் கே சாமி தனது சமூக வலைத்தள பக்கங்களில் எப்போது, யாரை அவதூறாக பேசினார் என்பது குறித்தும் புகார் அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.