பெண்கள் பாதுகாப்பிற்காக 18 வயது இளைஞர் கண்டுபிடித்துள்ள எலக்ட்ரிக் செருப்பு
இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும் நிலையில் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பெப்பர் ஸ்ப்ரே உள்பட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வருகின்றனர்
இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் பெண்களுக்காக தனிவகை ஷூ ஒன்றை தயாரித்துள்ளார். எலக்ட்ரோ ஷூ என்று கூறப்படும் இந்த ஷூவால் ஆபத்து நேரங்களில் எதிரிகளை மிதித்தால் அந்த நபர் ஷாக் அடித்து மூர்ச்சையாகிவிடுவார்
டெல்லி மாணவி நிர்பயா பாலியல் துன்புறுத்தல் காரணமாக மரணம் அடைந்த சம்பவம் தான் இந்த எலக்ட்ரிக் ஷூவை தயாரிக்க தன்னை தூண்டியதாக 18 வயது இளைஞர் சித்தார்த் மண்டேலா கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.