500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு வருமான வரித்துறையினர் தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்திவருகின்றனர். அவர்களது சோதனையில் நாள்தோறும் கட்டுகட்டாக ரூபாய் பறிமுதல் செய்யப்படுகின்றன.
வருமான வரித்துறையினர் இன்று நடத்திய சோதனையில் பெங்களூரு மற்றும் கோவாவில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று பெங்களூரில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் 2.25 லட்சம் ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கோவாவின் பனாஜியில் நடத்தப்பட்ட சோதனையில் 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.