பூசாரிக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்: மங்களூரில் பரபரப்பு
கர்நாடக மாநிலம் மங்களூரில் பெண் பக்தர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பூசாரி லோகேஷுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
போலி பூசாரிகள் பலர் பெண் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருவதாக கூறி பாலியல் தொல்லைகள் கொடுத்தது குறித்து பல செய்திகள் வெளிவந்தாலும் இன்னும் விழிப்புணர்வு இன்றி போலி பூசாரிகளிடம் சென்று ஆசி பெற்று வரும் பெண்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
இந்த நிலையில் மங்களூரில் பூசாரி லோகேஷ் என்பவர் பெண் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதாக கூறி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த விஷயம் வெளிவந்தவுடன் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.