புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தானை தாக்கிய இந்திய விமானப்படை
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை 1000 கிலோ அளவிலான குண்டுகளை பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை வீசியது
இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த அதிரடி தாக்குதலை இந்திய விமானப்படையின் 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஏற்கனவே பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் இன்று அதிகாலை நடந்த இந்த தாக்குதல் தக்க பதிலடியாக இருந்தாலும் இந்த தாக்குதல் இன்னும் தொடரும் என கருதப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.