பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் நடிகர்களில் ஒருவருமான ஹரிஷ் கல்யாண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டவர்களை காப்பாற்றி வரும் மருத்துவமனைக்கு 3.7 லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்து உள்ளார்

இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: புற்று நோயால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்டவர்களை அவர்கள் இறுதி நிமிடங்கள் வரை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீமாதா புற்று நோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்ரீ அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரின் 8 ஆண்டுகால சேவைக்கு என் சிறிய பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

Leave a Reply