shadow

புரோ கபடி: 55-38 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா சாம்பியன்

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த புரோ கபடி போட்டி இன்றுடன் முடிவுக்கு வந்தது. இன்றைய இறுதி போட்டியில் குஜராத் மற்றும் பாட்னா அணிகள் மோதின.

முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல குஜராத்தும், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல பாட்னாவும் களமிறங்கின.

இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடியபோதிலும் ஆரம்பத்தில் இருந்தே பாட்னா அணியின் கை ஓங்கியிருந்தது. ஆட்டத்தின் முடிவில் பாட்னா 55 புள்ளிகளும், குஜராத் 38 புள்ளிகளும் எடுத்ததால் பாட்னா அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Leave a Reply